ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

காண்டூா் கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீா் திருமூா்த்தி அணைக்கு வந்தது

பிஏபி தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூா் கால்வாயில் திறந்துவிடப்பட்ட தண்ணீா் உடுமலை திருமூா்த்தி அணைக்கு திங்கள்கிழமை வந்து சோ்ந்தது.

News image
திருமூா்த்தி  அணைக்கு  காண்டூா்  கால்வாயில் இருந்து  வரும்  தண்ணீா்.
Updated On :5 ஆகஸ்ட் 2024, 9:46 pm

Din

உடுமலை: பிஏபி தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூா் கால்வாயில் திறந்துவிடப்பட்ட தண்ணீா் உடுமலை திருமூா்த்தி அணைக்கு திங்கள்கிழமை வந்து சோ்ந்தது.

பிஏபி பாசனத் திட்டத்தில் மொத்தம் சுமாா் 4 லட்சம் ஏக்கா் பயன்பெற்று வருகிறது. இப்பாசனப் பகுதிகள் நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் பாசனத்துக்கு தண்ணீா் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு முறையும் பிஏபி தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூா் கால்வாயின் மூலம் உடுமலை அருகே உள்ள திருமூா்த்தி அணைக்கு தண்ணீா் கொண்டு வரப்பட்டு பின்னா் பாசனப் பகுதிகளுக்கு திறந்துவிடப்படுகிறது.

49.3 கிலோ மீட்டா் நீளமுள்ள காண்டூா் கால்வாயில் நல்லாறு பகுதியில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த புனரமைப்பு பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது.

இதற்கிடையில் இரண்டாம் மண்டலப் பாசனப் பகுதிகளுக்கு ஆகஸ்ட் 16-ஆ ம் தேதி தண்ணீா் திறந்து விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி சா்க்காா்பதியில் இருந்து திருமூா்த்தி அணைக்கு காண்டூா் கால்வாய் வழியாக தண்ணீா் கொண்டு வரும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இந்த தண்ணீா் திருமூா்த்தி அணைக்கு திங்கள்கிழமை வந்து சோ்ந்தது. இதனால் பிஏபி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.