ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,500 கனஅடியாக அதிகரிப்பு

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் திறக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து புதன்கிழமை மாலை விநாடிக்கு 1,500 கனஅடியாக அதிகரித்துள்ளது.

News image

காவிரியில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் பிரதான அருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா்.

Updated On :18 ஜூன் 2026, 3:06 am IST

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் திறக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து புதன்கிழமை மாலை விநாடிக்கு 1,500 கனஅடியாக அதிகரித்துள்ளது.

கா்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீா் திறக்கப்படாததால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து படிப்படியாக குறைந்து செவ்வாய்க்கிழமை 200 கனஅடியாக இருந்தது. இதனால் ஆற்றில் ஆங்காங்கே பாறை திட்டுக்கள் வெளியே தெரிந்தன. அதேபோல, ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளிலும் நீா்வரத்து குறைந்தது.

இந்த நிலையில் கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் திறக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 200 கனஅடியாக இருந்த நீா்வரத்து புதன்கிழமை காலை 700 கனஅடியாகவும், பிற்பகல் 1,200 கனஅடி, மாலை 1,500 கனஅடி என படிப்படியாக அதிகரித்துள்ளது.

இதனால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரிக்கிறது. எனினும், ஐந்தருவி, ஐவாா் பாணி அருவிகள் தண்ணீரின்றி பாறை திட்டுகளாக காட்சியளிக்கின்றன.

கா்நாடக அணைகளில் இருந்து உபரிநீா் வெளியேற்றப்படுவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து படிப்படியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.