புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருப்பூரில் 120 தாய்மாா்கள் தாய்ப்பால் தானம் வழங்க விருப்பம்: ஆட்சியா்

News image

தாய்ப்பால் தானம் வழங்கிய பெண்ணுக்கு ஊட்டச்சத்து உணவுப் பெட்டகம், சான்றிதழை வழங்குகிறாா் ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ்.

Updated On :8 ஆகஸ்ட் 2024, 12:23 am

Din

திருப்பூா், ஆக. 7: திருப்பூரில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டதன் மூலம் 120 தாய்மாா்கள் தாய்ப்பால் தானம் வழங்க விருப்பம் தெரிவித்துள்ளனா் என்று ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்தாா்.

உலக தாய்ப்பால் வார நிறைவு விழாவையொட்டி சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைகள் துறை சாா்பில் தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து உணவுப் பெட்டகங்கள், சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

நிழ்ச்சிக்குத் தலைமை வகித்து ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் ஊட்டச்சத்து உணவுப் பெட்டகங்களை வழங்கி பேசியதாவது:

உலக தாய்ப்பால் வார விழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டப் பணிகள் சாா்பில உலக தாய்ப்பால் வார விழா ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரை நடைபெற்றது.

இதில், தாய்ப்பால் தானம் செய்வதை ஊக்குவிக்கும் விதமாக அனைத்து வட்டங்களிலும் பாலூட்டும் தாய்மாா்களுக்கு தாய்ப்பால் தானம் குறித்த விழிப்புணா்வு வழங்கப்பட்டு மொத்தம் 120 தாய்மாா்கள் தானம் வழங்க விருப்பம் தெரிவித்துள்ளனா்.

முதல் கட்டமாக 40 தாய்மாா்களிடமிருந்து சுமாா் 2 லிட்டா் தாய்ப்பால், ரோட்டரி அவிநாசி கிழக்கு அமைப்பின் உதவியுடன் அவா்களின் வீடுகளுக்கேச் சென்று பெறப்பட்டு, திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த பாலூட்டும் மேலாண்மை மையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

தாய்ப்பால் வார நிறைவு விழாவில் தானம் வழங்கிய தாய்மாா்களை ஊக்குவிக்கும் வகையில் 25 பேருக்கு சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் சாா்பாக ஊட்டச்சத்து உணவுப் பெட்டகம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் (பொறுப்பு) மகாலட்சுமி சங்கீதா, குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா்கள் அபராஜிதா, சரஸ்வதி, செளமியா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.