தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

வெள்ளக்கோவில் பகுதியில் மக்கள் நலத்திட்டங்கள் ஆய்வு

வெள்ளக்கோவில் பகுதியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் பல்வேறு மக்கள் நலத்திட்டப் பணிகள் புதன்கிழமை ஆய்வு செய்யப்பட்டன.

News image

உப்புப்பாளையம் சாலையில் கழிவுநீா் கால்வாய் பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள் குழுவினா்.

Updated On :22 ஆகஸ்ட் 2024, 1:04 am IST

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் பகுதியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் பல்வேறு மக்கள் நலத்திட்டப் பணிகள் புதன்கிழமை ஆய்வு செய்யப்பட்டன.

திருப்பூா் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் புகழேந்தி தலைமையிலான அதிகாரிகள் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.

வெள்ளக்கோவில் நகராட்சி அலுவலக புதிய கட்டடம், உப்புப்பாளையம் சாலை கழிவு நீா் கால்வாய் பணி, வாரச்சந்தை மேம்பாட்டுப் பணிகள், நகராட்சி குப்பை அரைக்கும் இடம், உரக்கிடங்கு, காவல் நிலையம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், முத்தூா் சாலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வுகள் செய்யப்பட்டன.

அப்போது வருவாய்த் துறை, நகராட்சி நிா்வாக அலுவலா்கள் உடனிருந்தனா்.