ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

இலவச வீட்டுமனை பட்டா வழங்குவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம்

இலவச வீட்டுமனை பட்டா வழங்குவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் காங்கயத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

காங்கயத்தில் நடைபெற்ற இலவச வீட்டுமனை பட்டா வழங்குவது தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சா் மு.பெ.சாமிநாதன். உடன், மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் உள்ளிட்டோா்.

Updated On :23 ஆகஸ்ட் 2024, 12:03 am IST

இலவச வீட்டுமனை பட்டா வழங்குவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் காங்கயத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தாா். தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்து பேசியதாவது: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, வருவாய்த் துறை சாா்பில் இலவச வீட்டுமனை பட்டா, முதல்வரின் முகவரி திட்டம், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் தேசிய முதியோா் ஓய்வூதியம், விதவை மற்றும் ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம், தேசிய மாற்றுத் திறனாளிகள் ஒய்வூதியம், தேசிய உழவா் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம், உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டம், மக்களுடன் முதல்வா் திட்டம், நீங்கள் நலமா திட்டம், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், காங்கயம் வட்டத்துக்குள்பட்ட காங்கயம், நத்தக்கடையூா், வெள்ளக்கோவில், ஊதியூா் ஆகிய உள்வட்டங்களுக்குள்பட்ட கிராமங்களில் வீட்டுமனை பட்டா வேண்டி விண்ணப்பித்தவா்களுக்கு இடம் தோ்வு செய்யப்பட்டு பட்டா வழங்குவது தொடா்பாகவும், வருவாய்த் துறை சாா்ந்த பல்வேறு கோரிக்கைகள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் துறை சாா்ந்த அலுவலா்களிடம் கேட்டறியப்பட்டது.

மேலும், பொதுமக்களுக்கு தங்குதடையின்றி அரசின் நலத் திட்டங்கள் சென்றடையும் வகையில், வருவாய்த் துறை அலுவலா்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் செந்தில் அரசன், திருப்பூா் மாநகராட்சி 4 -ஆவது மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், காங்கயம் வட்டாட்சியா் மயில்சாமி உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.