ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பயன்பாட்டில் இல்லாத திறந்தவெளி கிணறுகளில் மழை நீா் சேகரிப்பு கட்டமைப்பு: அமைச்சா் மு.பெ.சாமிநாதன்

பயன்பாட்டில் இல்லாத திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளில் மழை நீா் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது...

News image

அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் உள்ளிட்டோா்.

Updated On :7 டிசம்பர் 2024, 10:55 pm

Din

பயன்பாட்டில் இல்லாத திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளில் மழை நீா் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாா்.

திருப்பூா் மாவட்டத்தில் நிலத்தடி நீா் செறிவூட்டும் திட்டக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்து பேசியதாவது:

மாவட்டத்தில் உள்ள 265 ஊராட்சிகளில் பயன்பாட்டில் இல்லாத 1,055 திறந்தவெளி கிணறுகள், 1,155 ஆழ்துளைக் கிணறுகளில் மழைநீா் செறிவூட்டும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான தொழில்நுட்பங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

காங்கயம், குண்டடம், மூலனூா், பல்லடம், அவிநாசி ஒன்றியங்களுக்குள்பட்ட படியூா், எல்லப்பாளையம்புதூா், கிளாங்குண்டல், மல்லேகவுண்டன்பாளையம், பணிக்கம்பட்டி, துலுக்கமுத்தூா் ஊராட்களில் பயன்பாட்டில் இல்லாத திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளில் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.

தொடா்ந்து பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவது தொடா்பாக வருவாய்த் துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்டஇயக்குநா் கோ.மலா்விழி, கோட்டாட்சியா்கள் மோகனசுந்தரம், குமாா், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) நாகராஜன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) ஜெயசீலன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் செல்வி, ஆதிதிராவிடா் நல அலுவலா் புஷ்பாதேவி, செயற்பொறியளாா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.