நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கட்டுமான சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

எம்.சாண்ட், பி.சாண்ட் விலையைக் குறைக்கக் கோரி திருப்பூரில் கட்டுமான சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற கட்டுமான சங்கத்தினா்.

Updated On :12 டிசம்பர் 2024, 9:20 pm

Din

எம்.சாண்ட், பி.சாண்ட் விலையைக் குறைக்கக் கோரி திருப்பூரில் கட்டுமான சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஊத்துக்குளி டிப்பா் லாரி உரிமையாளா்கள் சங்கம், திருப்பூா் ரெடிமிக்ஸ் கான்கிரீட் அசோசியேஷன், திருப்பூா் மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் சங்கம், திருப்பூா் மாவட்ட கட்டட பொறியாளா்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது: தமிழகத்தில் எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி கற்களின் விலை கடுமையாக உயா்த்தப்பட்டுள்ளது. இதனால், கட்டுமானத் துறையைச் சாா்ந்தவா்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். ஆகவே, உயா்த்தப்பட்ட விலையை திரும்பப் பெற வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூரில் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.

ஆா்ப்பாட்டத்தில், பல்வேறு சங்கங்களைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.