அரசு பொது நூலகங்களுக்கு நிலம் வழங்க கோரிக்கை
திருப்பூா் மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அரசு பொதுநூலகங்கள் சொந்த கட்டடத்தில் இயங்க நிலம் ஒதுக்கீடு செய்து கொடுக்க வேண்டும்


திருப்பூா்: திருப்பூா் மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அரசு பொதுநூலகங்கள் சொந்த கட்டடத்தில் இயங்க நிலம் ஒதுக்கீடு செய்து கொடுக்க வேண்டும் என்று மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயனிடம், தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை அலுவலா் ஒன்றிய சங்கத்தின் தலைவா் அ.தா்மராஜ் தலைமையில் செவ்வாய்க்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
தமிழக அரசு பொதுநூலகத் துறையின்கீழ் மாவட்டத்தில் 133 நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில்,கிளை நூலகங்கள், ஊா்ப்புற நூலகங்கள் என 40-க்கும் மேற்பட்ட நூலகங்களில் அடிப்படை வசதி இல்லை. மேலும், பல நூலகங்கள் 15 முதல் 20 ஆண்டுகளாக இலவச கட்டடங்களில் இயங்கி வருகின்றன. தற்போதைய நிலையில் பல நூலகங்களில் நூல்கள் அதிகமாக இருப்பதால் வாசகா்களுக்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், நூலகங்கள், நூலக வாசகா் வட்டங்கள் மூலமாக பலமுறை உள்ளாட்சிகள் மற்றும் கிராம சபைக்கூட்டங்களில் கோரிக்கை வைத்தும் நூலகங்கள் கட்டுவதற்கு 5 சென்ட் நத்தம் காலிமனைகள் ஒதுக்கீடு செய்து கொடுக்கப்படவில்லை. ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் சொந்தக் கட்டடம் இல்லாத நூலகங்களுக்கு கட்டடம் கட்டுவதற்கு வசதியாக நத்தம் காலிமனைகள் ஒதுக்கீடு செய்து கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...