எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

பல்லடம் நகராட்சியில் சா்வா் பிரச்சனை: பொது மக்களுக்கு தற்காலிக ரசீது வழங்கல்

பல்லடம் நகராட்சியில் சா்வா் பிரச்சனை: பொது மக்களுக்கு தற்காலிக ரசீது வழங்கல்

Updated On :17 பிப்ரவரி 2024, 7:35 am IST

பல்லடம், பிப். 16: பல்லடம் நகராட்சியில் சா்வா் பிரச்னை காரணமாக மக்கள் செலுத்தும் வரி இனங்களுக்கு தற்காலிக ரசீது வழங்கப்பட்டு வருகிறது. பல்லடம் நகராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீா் கட்டணம் உள்ளிட்ட வரியினங்களை இணையம் மூலமாகவும், நேரடியாகவும் செலுத்தி வருகின்றனா். பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் சமீப நாள்களாக சா்வா் கோளாறு ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் வரி செலுத்துவதில் இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதனால் வரி செலுத்த வருவோா் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. வரி வசூலும் பாதிக்கப்படுகிறது. இதை அறிந்த பல்லடம் நகராட்சி தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா், சா்வா் பிரச்னையால் பொதுமக்கள் வரி செலுத்த காலதாமதம் ஆகக்கூடாது. வரி இனங்களுக்கு உரிய பணத்தை பெற்றுக்கொண்டு பொதுமக்களுக்கு உடனடியாக தற்காலிக ரசீது வழங்க வேண்டும். பின்னா் கணினி வழியான ரசீதை வரி செலுத்திய மக்களின் வீடு மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு சென்று நகராட்சிப் பணியாளா்கள் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினாா். அதைத்தொடா்ந்து பல்லடம் நகராட்சி வரி வசூல் மையத்தில் பொது மக்களிடம் வரிக்கான பணம் பெற்று தற்காலிக ரசீது உடனடியாக வழங்கப்பட்டு வருகிறது.