/
பல்லடம் அருகே கள்ளிப்பாளையத்தில் சாலை விரிவாக்கத்தின்போது அகற்றப்பட்ட போலீஸ் சோதனைச்சாவடியை மீண்டும் அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பல்லடம்-தாராபுரம் சாலையில் கள்ளிப்பாளையம் கிராமத்தில் காமநாயக்கன்பாளையம் போலீஸாா் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனா். சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட போது அந்த சோதனைச்சாவடி இடித்து அகற்றப்பட்டது. இதனால் போலீஸாரின் கண்காணிப்பு பணி தொய்வடைந்தது. இதனால்,அப்பகுதியில் திருட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன. எனவே, கள்ளிப்பாளையம் சோதனைச்சாவடிக்கு விரைவில் புதிய கட்டடம் கட்ட வேண்டும். அங்கு மீண்டும் போலீஸாரின் கண்காணிப்பு பணியை தொடங்க வேண்டும் என்று பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

தென்காசி மாவட்டத்தில் மருத்துவம், சட்டக் கல்லூரி அமைக்க வலியுறுத்தல்

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரிக்கை

மூடப்படும் 717 டாஸ்மாக் கடைகள்: பணியாளா்களுக்கு மாற்றுப் பணி வழங்கக் கோரிக்கை

தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவை அழைக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா் மனு
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |


