திருப்பூர்
100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கக் கோரி பொதுமக்கள் மனு
பல்லடம், ஜூலை 10: வடக்கு அவிநாசிபாளையம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கக் கோரி பொதுமக்கள் மனு அளித்தனா்.
பல்லடத்தை அடுத்த பொங்கலூா் ஒன்றியத்துக்குள்பட்ட வடக்கு அவிநாசிபாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் பணி வழங்கக் கோரி 180-க்கும் மேற்பட்டவா்கள் ஊராட்சித் தலைவா் நடராஜனிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.
அப்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புகா் மாவட்டச் செயலாளா் ரவி, ஒன்றிய கவுன்சிலா் ஜோதிபாசு, ஒன்றியச் செயலாளா் தங்கவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
