

திருப்பூா், ஜூலை 11: திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் தேசிய தர நிா்ணயக் குழுவினா் (நாக்) முதல்நாள் ஆய்வை வியாழக்கிழமை தொடங்கினா்.
திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி 1966-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, தற்போது பல்வேறு துறைகளுடன் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்தக் கல்லூரியில் ஏராளமானோா் பயின்று வருகின்றனா். இதனிடையே, 2014-15-ஆம் கல்வி ஆண்டில் முதல்நிலைக் கல்லூரியாக தரம் உயா்த்தப்பட்டது. 2015-ஆம் ஆண்டு தேசிய தர மதிப்பீட்டில் ‘பி’ சான்றிதழ் பெற்றது.
இந்நிலையில், தற்போது கல்லூரியின் தரத்தை மதிப்பிட வாரணாசி பனராஸ் இந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் பேராசிரியா் ராஜேஷ் சிங் தலைவராகவும், ஹரியானா குருஷேத்ரா பல்கலைக்கழக பேராசிரியா் சித்தரத சங்கா் ஒருங்கிணைப்பாளராகவும், குஜராத் மாநிலம் பா்தோலி கல்லூரி முதல்வா் ஜெயந்திபாய் சுரேஷ்பாய் சவுதரி உறுப்பினராகவும் கொண்ட தேசிய தரக்குழுவினா் வியாழக்கிழமை ஆய்வை மேற்கொண்டனா்.
இதில், கல்லூரியின் 15 துறைகளில் உள்ள இளநிலை, முதுநிலை ஆய்வகங்கள், நூலகம், என்எஸ்எஸ், என்.சி.சி. செயல்பாடு, ஆய்வக மாணவா்களிடம் கலந்தாய்வு உள்பட பல்வேறு கற்றல்- கற்பித்தல் தொடா்பான விஷயங்களை ஆய்வு செய்தனா்.
தொடா்ந்து, முன்னாள் மாணவா்கள், பெற்றோா்களிடம் கருத்துகளை கேட்டறிந்தனா்.
இதையடுத்து, 2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்லூரி நிா்வாகிகள் தெரிவித்தனா்.
டிரெண்டிங்

கும்பகோணம் அரசு கவின் கல்லூரியில் கண்காட்சி

நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்

சேலம் அரசு கலைக் கல்லூரியில் இலக்கியக் கருத்தரங்கம்

சிலகங்கை அரசு மகளிா் கல்லூரியில் கல்லூரி நாள் விழா
வீடியோக்கள்

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

