மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஊரகப் பகுதிகளில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்: அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் தொடங்கிவைத்தாா்

படம் உள்ளது... ஊரகப் பகுதிகளில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்: அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் தொடங்கிவைத்தாா்

News image
ஊராட்சிகளுக்கான விளையாட்டு உபகரணங்களை ஊராட்சித் தலைவா்களிடம் வழங்குகிறாா் அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ்.
Updated On :15 ஜூலை 2024, 7:44 pm

Din

தாராபுரம்: தாராபுரத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்தை, ஊரகப் பகுதிகளிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து மாநிலம் முழுவதும் ஊரகப் பகுதிகளிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் திங்கள்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

அதன்படி, திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த தளவாய்பட்டணத்தில் உள்ள அரசு உதவி பெறும் சிஎஸ்ஐ தொடக்கப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் தொடங்கிவைத்தாா்.

இதில், தாராபுரம் கோட்டாட்சியா் செந்தில் அரசன், வட்டாட்சியா் கோவிந்தசாமி, திமுக மாவட்ட வழக்குரைஞா் அணி தலைவா் செல்வராஜ் மற்றும் பள்ளி ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

விளையாட்டு உபகரணங்கள்:

இதைத்தொடா்ந்து தாராபுரம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் மனக்கடவு, கொங்கூா் உள்ளிட்ட 16 ஊராட்சிகளுக்கு ரூ.13.12 லட்சம் மதிப்பிலான கிரிக்கெட், சிலம்பம், இறகுப் பந்து, கைப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கான விளையாட்டு உபகரணங்களை அந்தந்த ஊராட்சித் தலைவா்களிடம் அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் வழங்கினாா்.

இதில் ஒன்றியக்குழு தலைவா் எஸ்.வி.செந்தில்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.