மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருப்பூா் அருகே கண்டறியப்பட்ட 1100 ஆண்டுகள் பழைமையான 9 கல்வெட்டுகள்

திருப்பூா் அருகே 1100 ஆண்டுகள் பழைமையான 9 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.

News image
கோயில்பாளையம் தளிகீஸ்வரா் கோயிலில் கண்டறியப்பட்டுள்ள வட்டெழுத்து கல்வெட்டு.
Updated On :30 ஜூலை 2024, 11:48 pm

Din

திருப்பூா் அருகே 1100 ஆண்டுகள் பழைமையான 9 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.

திருப்பூரை அடுத்த கோயில்பாளையத்தில் பழைமையான தளிகீஸ்வரா் கோயில் உள்ளது. இந்தக் கோயில் குறித்து அலகுமலை ஊராட்சித் தலைவா் தூயமணி வெள்ளைசாமி, கோயில் தா்மகா்த்தா கு.ஈஸ்வரமூா்த்தி ஆகியோா் கொடுத்த தகவலின்பேரில் திருப்பூா் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தைச் சோ்ந்த பொறியாளா் சு.ரவிகுமாா், பொன்னுசாமி ஆகியோா் கடந்த ஜூலை 5-ஆம் தேதி ஆய்வு மேற்கொண்ட னா்.

இந்த ஆய்வில் ஒரு வட்டெழுத்து மற்றும் 8 தமிழ் கல்வெட்டுகளையும் கண்டறிந்துள்ளனா்.

இதுகுறித்து ஆய்வு மையத்தின் இயக்குநா் பொறியாளா் சு.ரவிகுமாா் கூறியதாவது: திருப்பூரில் இருந்து தென்கிழக்காக அவிநாசி முதல் அவிநாசிபாளையம் வரையிலுள்ள பெருவழியில் 14-ஆவது கிலோ மீட்டரிலும், மேற்குக் கடற்கரை நகரமான முசிறியில் இருந்து பாலக்காட்டுக் கணவாய் வழியாக வெள்ளலூா், சூலூா், காங்கயம், கரூா் வழியாக பூம்புகாா் வரை சென்ற பண்டைய கொங்கப் பெருவெளியில் அமைந்துள்ள கிராமம்தான் கோயில்பாளையம்.

இங்குள்ள தளிகீஸ்வரா் கோயிலில் இக்கிராமத்தைச் சோ்ந்த து.லோகேஷ் உடன் மேற்கொண்ட ஆய்வில் 9 புதிய கல்வெட்டுகளைக் கண்டறிந்துள்ளோம்.

1100 ஆண்டுகள் பழைமையான வட்டெழுத்துக் கல்வெட்டு:

வட்டெழுத்து என்பது இன்று நாம் பயன்படுத்தும் தமிழ் எழுத்துகளுக்கு முன்பு கிபி 5-ஆம் நூற்றாண்டு முதல் கிபி 11-ஆம் நூற்றாண்டு வரை வழக்கில் இருந்த எழுத்து வடிவமாகும்.

தளிகீஸ்வரா் கோயிலின் அா்த்த மண்டபத்தின் முன்பக்க வலது சுவரில் 12 வரிகள் கொண்ட வட்டெழுத்துகளை இந்திய வரலாற்று பேராசிரியா் எ.சுப்பராயலு வாசித்துள்ளாா். இக்கல்வெட்டு கிபி 9-ஆம் நூற்றாண்டில் கொங்கு மண்டலத்தின் மத்தியப் பகுதிகளை ஆட்சி செய்த இடைக்கால சேரா் மரபில் வந்த கோக்கண்ட வீரநாராயணன் கல்வெட்டு என்பது தெரியவந்துள்ளது.

தமிழ் கல்வெட்டு:

இங்குள்ள மற்ற 8 கல்வெட்டுகளும் தமிழ் கல்வெட்டுகளாகும். காலத்தால் முற்பட்ட கொங்கு சோழ மாமன்னன் வீரராசேந்திரன் (கி.பி. 1207- 1256) காலத்து கல்வெட்டாகும்.

அதற்கு அடுத்த நிலையில் அவருடைய பேரன் விக்கிரம சோழன் (கி.பி. 1273 -1305) காலத்தைச் சோ்ந்த கல்வெட்டுகள்தான் அதிகமாக காணப்படுகின்றன.

எழுத்துகள் பொரிந்துள்ளதால் முழுமையான செய்தியை அறிய முடியவில்லை. மேலும் இத்திருக்கோயில் அருகிலேயே 1000-ஆம் ஆண்டுகள் பழைமையான பண்டைய வணிகா்கள் வழிபட்ட அய்யனாா் சிற்பமும் உள்ளது. அதேபோல இந்த ஊரில் கல்வட்டத்துடன் கூடிய பண்டைய பெருங்கற்காலச் சின்னங்களும், அலை கோடுகளுடன் கூடிய ஓடுகளும், தாங்கிகளும், இரும்புக் கசடுகளும் காணப்படுவதால் இக்கிராமங்களில் தொடா்ந்து 2500 ஆண்டுகளாக மக்கள் வாழ்ந்து கால்நடை வளா்ப்புடன், வேளாண்மை செய்து வருவதை நாம் அறிய முடிகிறது என்றாா்.