வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.34.95 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஏலத்துக்கு, வாணியம்பாடி, திருப்பத்தூா், பழனி, பள்ளபட்டி, கீரனூா், அய்யம்பாளையம், மங்கலப்பட்டி உள்ளிட்ட இடங்களில் இருந்து 101 விவசாயிகள் 818 மூட்டைகளில் 43 டன் தேங்காய்ப் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
வெள்ளக்கோவில், முத்தூா், சிவகிரி, ந. ஊத்துக்குளி, மூலனூா், அவல்பூந்துறை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 16 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா். தேங்காய்ப் பருப்பு கிலோ ரூ.62.65 முதல் ரூ.94.26 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.91.09. கடந்த வார சராசரி விலை கிலோ ரூ. 91.19.
ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 34.95 லட்சம், அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சி. மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.
தொடர்புடையது
கொடுமுடியில் ரூ.11 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

வெள்ளக்கோவிலில் ரூ.43 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம்

போச்சம்பள்ளியில் ரூ. 13.37 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

வெள்ளக்கோவிலில் ரூ.43 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
