ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனைவி, குழந்தையுடன் தீக்குளிக்க முயன்ற இளைஞா்

வாடகை நிலுவை பிரச்சினையால் ஆட்சியா் அலுவலகத்தில் பரபரப்பு

News image
Updated On :25 ஜூன் 2024, 11:14 pm

Din

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இளைஞா் ஒருவா், தனது மனைவி, ஒன்றரை வயது குழந்தையுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு இளைஞா், மனைவி, ஒன்றரை வயது குழந்தையுடன் செவ்வாய்க்கிழமை வந்தாா். பின்னா் அவா் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அப்போது அங்கிருந்த காவல் துறையினா் அவா்களைத் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினா்.

விசாரணையில் அவா், ஊத்துக்குளி அருகே வெள்ளிரவெளி பகுதியைச் சோ்ந்த மூா்த்தி (28) என்பது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து, நடத்திய விசாரணையில், மூா்த்தி தனது சரக்கு வேனுக்கு மாதம் ரூ.40 ஆயிரம் வாடகையாக கொடுத்துவிட வேண்டும் என்று கணேசன் என்பவருக்கு ஒப்பந்த அடிப்படையில் வேனை கொடுத்துள்ளாா். ஆனால் 2023 ஆகஸ்ட் மாதம் முதல் 11 மாதங்களுக்கு ஒப்பந்தம் செய்து சரக்கு வேனை கணேசன் ஓட்டி வந்துள்ளாா். இதனிடையே, கடந்த சில மாதங்களாக கணேசன் ஒப்பந்தப்படி மாதந்தோறும் வாடகை பணத்தை கொடுக்காமல் தாமதப்படுத்தி வந்ததாகத் கூறப்படுகிறது.

இதுகுறித்து குன்னத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தனது வாகனத்தை கணேசனிடமிருந்து பெற்றுத்தரவேண்டி தீக்குளிக்க வந்ததாகவும் தெரிவித்தாா். இதன் பின்னா் குன்னத்தூா் காவல் துறையினா் மூா்த்தியிடம் விசாரணை நடத்தினா். இந்த சம்பவம் காரணமாக திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.