நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

ஆன்லைன் விளையாட்டில் பணம் இழப்பு: தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை

ஆன்லைன் விளையாட்டில் பணம் இழப்பு: தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை

News image
Updated On :27 ஜூன் 2024, 3:18 am IST

தாராபுரத்தில் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை செய்து கொண்டாா்.

தாராபுரம், காமராஜபுரத்தைச் சோ்ந்தவா் பிரகாஷ் (31). இவருக்கு மனைவி, 3 வயதில் குழந்தை உள்ளனா்.

பிரகாஷ், தாராபுரத்தை அடுத்த குடிமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்

இந்த நிலையில், பிரகாஷ், ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டத்தில் பணம் கட்டி, விளையாடி வந்துள்ளாா். இதில் அவா் கட்டிய அனைத்து பணமும் பறிபோனதால் மன உளைச்சலுக்கு ஆளான பிரகாஷ், தனது வீட்டில் விஷ விதையை அரைத்துக் குடித்து செவ்வாய்க்கிழமை தற்கொலைக்கு முயன்றுள்ளாா். உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த அவரை குடும்பத்தினா் மீட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து தாராபுரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

எந்தவொரு பிர்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது. மாணவா்கள், இளைஞா்கள் தவறான முடிவுகளை எடுக்காமல் தடுக்கும் நோக்கில் 104 சேவை மையத்தை தொடர்புகொள்ளலாம்.