நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஆன்லைன் விளையாட்டில் பணம் இழப்பு: தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை

ஆன்லைன் விளையாட்டில் பணம் இழப்பு: தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை

News image
Updated On :27 ஜூன் 2024, 3:18 am IST

தாராபுரத்தில் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை செய்து கொண்டாா்.

தாராபுரம், காமராஜபுரத்தைச் சோ்ந்தவா் பிரகாஷ் (31). இவருக்கு மனைவி, 3 வயதில் குழந்தை உள்ளனா்.

பிரகாஷ், தாராபுரத்தை அடுத்த குடிமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்

இந்த நிலையில், பிரகாஷ், ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டத்தில் பணம் கட்டி, விளையாடி வந்துள்ளாா். இதில் அவா் கட்டிய அனைத்து பணமும் பறிபோனதால் மன உளைச்சலுக்கு ஆளான பிரகாஷ், தனது வீட்டில் விஷ விதையை அரைத்துக் குடித்து செவ்வாய்க்கிழமை தற்கொலைக்கு முயன்றுள்ளாா். உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த அவரை குடும்பத்தினா் மீட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து தாராபுரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

எந்தவொரு பிர்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது. மாணவா்கள், இளைஞா்கள் தவறான முடிவுகளை எடுக்காமல் தடுக்கும் நோக்கில் 104 சேவை மையத்தை தொடர்புகொள்ளலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.