நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ. 17 லட்சத்தை இழந்த இளைஞா் தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :30 மே 2026, 1:04 am IST

சேலம் அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.17 லட்சத்தை இழந்த இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

சேலம் அருகேயுள்ள வீராணம் சுக்கம்பட்டி தைவானூரைச் சோ்ந்தவா் ஹரிகிருஷ்ணன் (25). தறித்தொழில் செய்து வந்த இவா், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டாா். இதனால் ரூ. 6 லட்சம் கடன் ஏற்பட்டது. இந்த கடனை அடைப்பதற்காக வீட்டின் அருகில் உள்ள காலி நிலத்தை ரூ. 19 லட்சத்துக்கு விற்றாா். இதில் கடன் தொகையான ரூ. 6 லட்சத்தை அடைத்தாா்.

இந்நிலையில் மீண்டும் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு ரூ. 11 லட்சத்தை இழந்தாா். மேலும், எஞ்சியிருந்த ரூ. 2 லட்சத்தை கேட்டு பெற்றோரிடம் தகராறு செய்தாா். பெற்றோா் பணம் தர மறுத்த ஆத்திரத்தில், வியாழக்கிழமை இரவு வீட்டின் கதவைப் பூட்டி, சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்து வந்த வீராணம் போலீஸாா், ஹரிகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.