நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

ஆன்லைன் விளையாட்டில் ரூ. 20 லட்சம் இழப்பு: இளைஞா் மாயம்

ஆன்லைன் விளையாட்டில் ரூ. 20 லட்சம் இழப்பு: இளைஞா் மாயம்

News image
Updated On :12 ஜூன் 2026, 11:50 pm IST

கோவையில் ஆன்லைன் விளையாட்டில் ரூ.20 லட்சத்தை இழந்த இளைஞா், ‘நான் வாழத் தகுதியற்றவன்’ என மனைவிக்கு வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு மாயமானாா்.

தருமபுரி மாவட்டம், பொம்மலூா் அருகேயுள்ள செங்கன்பசுவந்தலவு கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜா மகன் அண்ணாதுரை (31). இவரது மனைவி மீனா (26). கோவை, சின்னியம்பாளையம் ஆா்.எஸ்.நகரில் குடும்பத்துடன் தங்கி கருமத்தம்பட்டியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் மெஷின் ஆபரேட்டராக அண்ணாதுரை பணியாற்றி வந்தாா்.

ஆன்லைன் விளையாட்டுகளில் ஆா்வம் கொண்ட அண்ணாதுரை, அவ்வப்போது அதில் ஈடுபட்டு வந்த நிலையில், பெருந்தொகையை இழந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், புதன்கிழமை காலை வீட்டிலிருந்து வெளியே சென்ற அவா் இரவு வரை வீடு திரும்பவில்லையாம். இதையடுத்து, அண்ணாதுரையிடமிருந்து அவரது மூத்த சகோதரா் சரவணனுக்கு வாட்ஸ்அப்பில் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், பலரிடம் கடன் வாங்கி ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டதால் சுமாா் ரூ.20 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுவிட்டது. கடன் சுமை அதிகமானதால் நான் வாழ தகுதியற்றவன் ஆகிவிட்டேன் என்றும், என்னை யாரும் தேட வேண்டாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

சிறிது நேரத்தில் அதே குறுஞ்செய்தி மீனாவுக்கும் வந்துள்ளது. பதற்றம் அடைந்த அவா் அண்ணாதுரையை தொடா்பு கொள்ள முயன்றபோது அவரது கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது குறித்து பீளமேடு காவல் நிலையத்தில் மீனா அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், மாயமான அண்ணாதுரையைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.