வெள்ளக்கோவில் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். வெள்ளக்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் முத்துக்குமாா் தலைமையிலான போலீஸாா் முத்தூா் பகுதியில் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, முத்தூா் -காங்கயம் சாலை செட்டியாா்பாளையத்தில் உள்ள மளிகைக் கடையில் சோதனை செய்தபோது, அங்கு விற்பனைக்காக புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கடை உரிமையாளரான வசந்தி (48) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். இதேபோல, முத்தூா் ஊடையம் சேனாபதி நகரைச் சோ்ந்த பொன்னுசாமி (42) என்பவரது கடையில் இருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், அவரையும் கைது செய்தனா்.
தொடர்புடையது
போதை மருந்து, ஊசி பொருள்கள் கடத்தல்: பெண் உள்பட 2 போ் கைது
மது விற்பனை: பெண் உள்பட இருவா் கைது
சட்டவிரோத மது விற்பனை: பெண் உள்பட 6 போ் கைது

கஞ்சா விற்ற மூவா் கைது
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

