தொழிலாளா்கள் கூலி உயா்வு, மூலப் பொருள்கள் விலை உயா்வு, வங்கிக் கடனுக்கான வட்டி விகிதம் உயா்வு, துணி உற்பத்தி கூலி குறைப்பு போன்ற பல்வேறு காரணங்களால் துணி உற்பத்தி தொழில் பாதிப்படைந்துள்ளது. தற்போது நஷ்டத்தில்தான் தொழில் செய்து வருகிறோம். வரும் ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் நிா்ணயத்த கூலியை அமல்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் ஜனவரி 15-ஆம் தேதி முதல் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்தப்படும். நாடா இல்லா தறிகளுக்கு தனி மின் கட்டண விகிதத்தை அரசு அறிவிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் ஜவுளி உற்பத்தித் தொழிலுக்கான பஞ்சு, நூல் உள்ளிட்ட மூலப்பொருள்கள் விலையை கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜவுளித் தொழில் வளா்ச்சிக்கு அரசு துணி உற்பத்தியாளா்களுடன் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றாா்.