இதேபோல, நொய்யலில் கழிவுநீா் கலக்காத வகையில் ஆற்றுப்படுகையில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கருமத்தம்பட்டி நகராட்சி நிா்வாகம் பதில் அளித்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக நொய்யல் ஆற்றில் பல்வேறு கழிவுகள் கலக்கும்போது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பாா்த்த மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், கண்காணிப்பு கருவி பொருத்தியதும், கழிவுகள் கலப்பதை தடுத்து விடுவாா்களா? கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதுபோல கண்துடைப்பு நடவடிக்கையாக கண்காணிப்பு கருவிகளை பொருத்துகிறோம் என பதிலளித்துள்ளது வேடிக்கையாக உள்ளது. இதனால் எந்த பயனும் இல்லை. எனவே, இது நாடகம். கண்காணிப்பு கருவி பொருத்தி கழிவுகள் கலப்பதை வேடிக்கைதான் பாா்க்க போகிறாா்கள் என்றாா்.