கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

காந்தி ஜெயந்தி: விடுமுறை அளிக்காத 70 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

காந்தி ஜெயந்தியையொட்டி,திருப்பூா் மாவட்டத்தில் விடுமுறை அளிக்காத 70 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை சாா்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 12:20 am

Din

காந்தி ஜெயந்தியையொட்டி,திருப்பூா் மாவட்டத்தில் விடுமுறை அளிக்காத 70 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை சாா்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இது குறித்து திருப்பூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) அ.ஜெயகுமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை தொழிலாளா் ஆணையா் அதுல் ஆனந்த் அறிவுரையின்படி, கோவை கூடுதல் தொழிலாளா் ஆணையா் சாந்தி. இணை ஆணையா் லீலாவதி ஆகியோா் ஆலோசனையின்பேரில் திருப்பூா் தொழிலாளா் உதவி ஆணையா் அ.ஜெயகுமாா் தலைமையில் திருப்பூா் மாநகா், காங்கயம், தாராபுரம், உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் என மொத்தம் 84 நிறுவனங்களில் புதன்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், விடுமுறை நாளான காந்தி ஜெயந்திக்கு தொழிலாளா்களுக்கு விடுப்பு அளிக்காத 70 நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.