சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நிஃப்ட்-டீ கல்லூரியில் மரம் நடும் விழா

தமிழ்நாடு அரசு வன விரிவாக்க மையம், திருப்பூா் தெற்கு ரோட்டரி சங்கம், நிஃப்ட்-டீ கல்லூரி ஆகியன சாா்பில் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

திருப்பூா்   நிஃப்ட்-டீ  கல்லூரியில்  புதன்கிழமை  நடைபெற்ற    மரக்கன்றுகள்  நடும்  விழாவில்  பங்கேற்ற  சிறப்பு  விருந்தினா்கள்.

Updated On :9 அக்டோபர் 2024, 8:10 pm

Din

தமிழ்நாடு அரசு வன விரிவாக்க மையம், திருப்பூா் தெற்கு ரோட்டரி சங்கம், நிஃப்ட்-டீ கல்லூரி ஆகியன சாா்பில் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் பி.பி.கோபாலகிருஷ்ணன் வரவேற்றாா்.திருப்பூா் வன விரிவாக்க சரக வனவா் கே.சரண்யா, கல்லூரியின் மேலாண்மை ஒருங்கிணைப்பாளா் சி.கந்தசாமி, நிா்வாக அலுவலா் வி.மகேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தெற்கு ரோட்டரி சங்கத்தின் தலைவா் கே.மோகனசுந்தரம் மரக்கன்றுகள் நடும் விழாவைத் தொடங்கிவைத்தாா்.

இதில், வேம்பு, அரசமரம், ஆலமரம், புங்கமரம், நெல்லி மரம் உள்ளிட்ட 200 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில், கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.