போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வெள்ளக்கோவிலில் 22 மரங்களை அகற்ற ஏலம்

வெள்ளக்கோவில் உட்கோட்ட நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளில் 22 மரங்களை அகற்ற புதன்கிழமை பொது ஏலம் நடத்தப்பட்டது.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 8:06 pm

Din

வெள்ளக்கோவில் உட்கோட்ட நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளில் 22 மரங்களை அகற்ற புதன்கிழமை பொது ஏலம் நடத்தப்பட்டது.

வெள்ளக்கோவில் நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் உட்கோட்ட பொறியாளா் ரவிச்சந்திரன் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது.

நத்தக்காடையூா் - உத்தமபாளையம் மாவட்டச் சாலையில், சாலை விரிவாக்கப் பணிக்கு இடையூறாக உள்ள 18 மரங்கள், காங்கயம் - கொடுமுடி மாநிலச் சாலையில் 4 மரங்களை அகற்ற ஏலம் நடைபெற்றது. இதில் மொத்தம் 47 போ் பங்கேற்றனா். அதிக ஏலத் தொகையான ரூ.40,500-க்கு ஏலம் இறுதி செய்யப்பட்டது. இதில் 19 புளிய மரங்கள், 2 வாதநாராயணண் மரங்கள், 1 வாகை மரம் அகற்றப்படுகின்றன. இவற்றை அகற்ற திருப்பூா் மாவட்ட பசுமை தீா்ப்பாயத்தில் அனுமதி பெறப்பட்டுள்ளது.

மரங்களை அகற்றியவுடன் சாலை விரிவாக்கப் பணிகள் தொடங்கப்படும். அவற்றுக்கு ஈடாக புதிதாக மரக்கன்றுகள் நடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

பொது ஏலத்தின்போது உட்கோட்ட உதவிப் பொறியாளா் சத்யபிரபா மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.