கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அவிநாசி சாா்-பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை: ரூ.1.84 லட்சம் பறிமுதல்

அவிநாசி சாா்-பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை...

News image
Updated On :23 அக்டோபர் 2024, 9:35 pm

Din

அவிநாசி சாா்-பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனையில் ரூ.1.84 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி சாா்-பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை மண்டல தணிக்கைக் குழு அதிகாரி சதீஷ்குமாா் மேற்பாா்வையிலும், காவல் ஆய்வாளா் (பொ) கீதாலட்சுமி தலைமையிலும் 4-க்கும் மேற்பட்ட போலீஸாா் புதன்கிழமை பிற்பகல் 3.40 மணியளவில் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அலுவலகத்தின் கதவுகள் அடைக்கப்பட்டு, சாா்-பதிவாளா் வெங்கிடுசாமி உள்ளிட்ட அலுவலா்களிடம் இருந்த ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனையிட்டனா்.

இதில், கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 84 ஆயிரத்து 670ஐ பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.