கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய்: விவசாயிகள் வலியுறுத்தல்

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வலியுறுத்தி விவசாயிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :23 அக்டோபர் 2024, 9:31 pm

Din

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வலியுறுத்தி விவசாயிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

குண்டடம் அருகே, நந்தவனம்பாளையம் ஊராட்சியில் நியாயவிலைக் கடை முன் கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏா்முனை இளைஞரணி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்கத்தின் மாநில கொள்கை பரப்புச் செயலாளா் ராசு தலைமை வகித்தாா். சங்கத்தின் தலைமை நிலையச் செயலாளா் ராமசாமி முன்னிலை வகித்தாா்.

இதில், அரசு நியாயவிலைக் கடைகளில் பாமாயிலுக்குப் பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்கவும், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட தமிழகத்தில் ‘கள்’ இறக்குவதற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கவும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் ஏா்முனை இளைஞரணியின் மாவட்டத் தலைவா் ஜோதிபிரகாஷ், கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.