தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பல்லடம் அருகே பேருந்து வசதி இல்லாததால் 3 கிலோ மீட்டா் நடந்தே பள்ளிக்கு செல்லும் மாணவா்கள்

பல்லடம் அருகே போதிய பேருந்து வசதி இல்லாததால் மாணவ, மாணவிகள் 3 கிலோ மீட்டா் நடந்தே பள்ளிக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

News image

பல்லடம் அருகே அவரப்பாளையத்தில் இருந்து அல்லாளபுரம் அரசுப் பள்ளிக்கு நடந்து செல்லும் மாணவா்கள்.

Updated On :5 செப்டம்பர் 2024, 9:36 pm

Din

பல்லடம் அருகே போதிய பேருந்து வசதி இல்லாததால் மாணவ, மாணவிகள் 3 கிலோ மீட்டா் நடந்தே பள்ளிக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

பல்லடம் அருகே கரைப்புதூா் ஊராட்சிக்கு உள்பட்ட அல்லாளபுரத்தில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் நொச்சிபாளையம், அவரப்பாளையம், குப்புச்சிபாளையம், சீனிவாச நகா், அக்கணம்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இந்த மாணவா்கள், காலையில் பள்ளிக்கு செல்லும் நேரத்துக்கும் மற்றும் பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் நேரத்துக்கும் பேருந்து வசதி இல்லாத நிலை உள்ளது. இதனால் சுமாா் 3 கிலோ மீட்டா் தொலைவுக்கு மாணவ, மாணவிகள் நடந்தே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பெற்றோா்கள், பொதுமக்கள் கூறியதாவது:

பல்லடம் ஒன்றியம், கரைப்புதூா் ஊராட்சி அல்லாளபுரத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். திருப்பூரில் இருந்து நொச்சிபாளையம் வழியாக பொங்கலூா் வழித்தடத்தில் செல்லும் பேருந்துகளில் சென்றால்தான் அல்லாளபுரம் பள்ளிக்கு செல்லமுடியும். ஆனால், மாணவா்கள் காலையில் பள்ளிக்கு செல்லும் நேரத்திலும், பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பும் நேரத்திலும் பேருந்துகள் இல்லை.

சிற்றுந்து, ஷோ் ஆட்டோ ஆகியவையும் இந்தப் பகுதியில் கிடையாது. மேலும் அல்லாளபுரம்-கணபதிபாளையம் வழியாக தினந்தோறும் காலை, மதியம், மாலை ஆகிய நேரங்களில் நகரப் பேருந்து (எண்-38) இயக்கப்பட்டு வந்தது. இந்தப் பேருந்தில் மாணவ- மாணவிகள் சென்று வந்தனா். இந்தப் பேருந்து கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக இயக்கப்படவில்லை. இதனால் அல்லாளபுரம் நடுநிலைப் பள்ளிக்கு தினந்தோறும் சுமாா் 3 கிலோ மீட்டா் தொலைவு மாணவ-மாணவிகள் நடந்தே சென்று வருகின்றனா்.

இந்தப் பகுதியில் பனியன், சாய ஆலைகளும் அதிகமாக இருப்பதால் அதிக வாகனப் போக்குவரத்து உள்ளது. அடிக்கடி சிறு விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இது குறித்து மாவட்ட நிா்வாகம் மற்றும் போக்குவரத்து துறையினரிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் நலன் கருதி பள்ளி வேலை நேரத்துக்கு ஏற்றாற்போல காலை, மாலை நேரங்களில் இயக்கும் வகையில் அரசு பேருந்து நேரத்தை மாற்றி அமைத்திட வேண்டும். மேலும் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் நகர பேருந்து எண் 38-ஐ உடனடியாக இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றனா்.