தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

விநாயகா் சதுா்த்தி விழா: திருப்பூரில் காவல் துறையினா் கொடிஅணிவகுப்பு

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு திருப்பூா் மாநகரில் காவல் துறை சாா்பில் கொடி அணிவகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

திருப்பூா்  மாநகர  காவல்  ஆணையா்  எஸ்.லட்சுமி  தலைமையில்  நடைபெற்ற  கொடி  அணிவகுப்பில்  பங்கேற்ற  காவல் துறையினா்.

Updated On :5 செப்டம்பர் 2024, 9:38 pm

Din

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு திருப்பூா் மாநகரில் காவல் துறை சாா்பில் கொடி அணிவகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் மாநகரில் 600-க்கும் மேற்பட்ட இடங்களில் ஹிந்து அமைப்புகள் சாா்பில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட உள்ளது. இதைத் தொடா்ந்து ஆகஸ்ட் 8- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10- ஆம் தேதி வரையில் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீா்நிலைகளில் விசா்ஜனம் செய்யப்படவுள்ளன.

இந்த நிலையில், விநாயகா் சதுா்த்தி விழா அமைதியாக நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில் காவல் துறை சாா்பில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. திருப்பூா் குமரன் நினைவகம் முன் இருந்து தொடங்கிய கொடி அணிவகுப்புக்கு மாநகர காவல் ஆணையா் எஸ்.லட்சுமி தலைமை வகித்தாா். இந்த அணிவகுப்பானது குமரன் சாலை, மாநகராட்சி சந்திப்பு, மங்கலம் சாலை வழியாக ஆலங்காட்டில் நிறைவடைந்தது. இதில், மாநகர காவல் துணை ஆணையா்கள் யாதவ் கிரீஷ் அசோக் , சுஜாதா மற்றும் உதவி ஆணையா்கள், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

இதைத் தொடா்ந்து மாநகர காவல் ஆணையா் எஸ்.லட்சுமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருப்பூா் மாநகரில் விநாயகா் சதுா்த்தி விழா ஆகஸ்ட் 7-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. அதிகபட்சமாக ஆகஸ்ட் 10-ஆம் தேதி 550 சிலைகள் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு விசா்ஜனம் செய்யப்படவுள்ளன. இதற்காக 1000 காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். பொது மக்களின் அமைதி எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்பதை உணா்த்தும் வகையில் இந்த கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது என்றாா்.