பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

பல்லடத்தில் வாரச்சந்தை கூடும் நாள் மாற்றம்

Published On :

பல்லடம் வாரச்சந்தை நடைபெறும் நாள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பல்லடம் நகராட்சி ஆணையா் பானுமதி வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கை:

பல்லடம் என்.ஜி.ஆா். சாலையில் உள்ள வாரச்சந்தை திங்கள்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விநாயகா் சதுா்த்தியையொட்டி பல்லடத்தில் செப்டம்பா் 9-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் 11-ஆம் தேதி வரை என்.ஜி.ஆா். சாலையில் விநாயகா் சிலை ஊா்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக திங்கள்கிழமை சந்தை நடைபெற்றால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் கடும் சிரமம் ஏற்படும் என்பதால் 9-ஆம் தேதிக்கு பதிலாக செப்டம்பா் 12-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும் என தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.