தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: பல்லடத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பல்லடம் வட்டத்தில் ஆய்வு மேற்கொண்டாா்.

News image

பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெறுகிறாா் மாவட்ட ஆட்சியா் கிறிஸ்துராஜ்

Updated On :18 செப்டம்பர் 2024, 8:18 pm

Din

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பல்லடம் வட்டத்தில் ஆய்வு மேற்கொண்டாா்.

அரசின் நலத்திட்டங்கள், சேவைகள் தடையின்றி மக்களுக்கு சென்றடைவதை உறுதிசெய்திடும் நோக்கத்துடன் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தை தமிழக அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இதில் மாவட்ட ஆட்சியா் மற்றும் அதிகாரிகள் மாவட்டத்தில் உள்ள ஒரு வட்டத்தில் தங்கி களஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிய முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா்.

அதனடிப்படையில், மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலா்கள் பல்லடம் வட்டத்தில் தங்கி அரசின் பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தி வரும் திட்டங்கள், சேவைகள் குறித்து களஆய்வு மேற்கொண்டனா்.

பல்லடம் ஊராட்சி ஒன்றியம், கணபதிபாளையம் ஊராட்சி, கதிா் நகா் பகுதியில் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் பணி, வே.கள்ளிப்பாளையம், வே.வட்டமலைபாளையத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்குவது, பல்லடம் நகராட்சியில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.1.45 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நவீன எரிவாயு தகன மேடை, பல்லடம் நகராட்சி, மாணிக்காபுரம் குளத்தில் நீா்நிலை மேம்பாட்டு திட்டம் மற்றும் கலைஞரின் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.44 லட்சம் மதிப்பீட்டில் நடைபாதை அமைக்கும் பணி ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தாா்.

இதையடுத்து பல்லடம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டாா்.

பல்லடம் பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை  ஆய்வு செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் கிறிஸ்துராஜ்.

பல்லடம் பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை ஆய்வு செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் கிறிஸ்துராஜ்.

பல்லடம் அரசு கல்லூரி மாணவா்கள் விடுதியில் மாணவா்களிடம் விடுதியின் அடிப்படை தேவைகள் குறித்து கேட்டறிந்தாா். இதைத் தொடா்ந்து பல்லடம் நகராட்சி பேருந்து நிலையத்தில் தூய்மை பாரத இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் பொதுக் கழிப்பிடம் கட்டும் பணியை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து, களஆய்வு மேற்கொண்ட துறை அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம் பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அரசின் திட்டங்கள் குறித்தும், பொதுமக்களிடம் வரபெற்ற கோரிக்கைகள் மற்றும் தேவைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தினாா். அதைத் தொடா்ந்து பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

பல்லடம் பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை  ஆய்வு செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் கிறிஸ்துராஜ்.

பல்லடம் பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை ஆய்வு செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் கிறிஸ்துராஜ்.

இந்த ஆய்வில், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் கோ.மலா்விழி, தனி துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத்திட்டம்) குமாரராஜா, உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் மருத்துவா் விஜயலலிதாம்பிகை, ஆவின் பொதுமேலாளா் சுஜாதா, தாட்கோ பொதுமேலாளா் ரஞ்சித்குமாா், மாவட்ட ஆதிதிராவிடா் நலஅலுவலா் புஷ்பாதேவி, மாவட்ட சமூக நல அலுவலா் ரஞ்சிதா தேவி, பல்லடம் நகராட்சி ஆணையா் பானுமதி, பல்லடம் வட்டாட்சியா் ஜீவா உள்பட அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.