மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அவிநாசி அருகே சாலைப் பணியை முழுமையாக முடிக்க வலியுறுத்தி சாலை மறியல்

அவிநாசியை அடுத்த  கருணைபாளையத்தில் தார் சாலைப் பணியை முறையாகவும், முழுமையாகவும் மேற்கொள்ள வலியுறுத்தி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
அவிநாசி-மங்கலம் சாலையில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
Updated On :29 ஜனவரி 2024, 5:13 am

DIN

அவிநாசியை அடுத்த  கருணைபாளையத்தில் தார் சாலைப் பணியை முறையாகவும், முழுமையாகவும் மேற்கொள்ள வலியுறுத்தி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து போரட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறியதாவது- அவிநாசியை அடுத்த வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட பெரிய கருணைபாளையத்தில் சாலை மிகவும் மோசமடைந்த நிலையில் காணப்பட்டது. பொதுமக்கள் கோரிக்கையை அடுத்து பெரிய கருணைபாளையம் முதல் அவிநாசி-மங்கலம் சாலை வரை புதிய தார் சாலை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

Story image

இதில், ஏற்கெனவே உள்ள தார் சாலையை அகற்றாமல் அதன்மேலேயே புதிய தார் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. ஒராண்டுக்கு மேலாகியும் பணி முழுமையாக முடிக்கப்படாமல் உள்ளது. இது குறித்து பலமுறை ஊராட்சி ஒன்றிய நிர்வாக்த்திடம் மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே உடனயாக சாலைப் பணியை முழுமையாக முடித்துத் தர உத்தரவாதம் அளித்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என்றனர்.  

அவிநாசி-மங்கலம் சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், அரை மணி நேரத்துக்கும் மேலாக அவிநாசி, மங்கலம் சாலையில் போக்குவரத்து பாதிப்பிற்குள்ளாகி உள்ளது. சம்பவயிடத்துக்கு வந்த போலீஸார், ஒன்றிய நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.