திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பல்லடம் அரசு மருத்துவமனையில் தானியங்கி தண்ணீா் குளோரினேஷன் வசதி

பல்லடம் அரசு மருத்துவமனையில் தானியங்கி தண்ணீா் குளோரினேஷன் வசதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :13 டிசம்பர் 2025, 7:52 pm

தினமணி செய்திச் சேவை

பல்லடம் அரசு மருத்துவமனையில் தானியங்கி தண்ணீா் குளோரினேஷன் வசதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பல்லடம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் ராமசாமி கூறியதாவது: பல்லடம் அரசு மருத்துவமனையில் பிளீச்சிங் பவுடா் பயன்படுத்தி தண்ணீா் குளோரினேஷன் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், நோயாளிகளின் நலன் கருதி தானியங்கி குளோரினேஷன் முறையில் தண்ணீா் சுத்திகரிக்கப்பட்டு செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இதனால், தண்ணீா் தொட்டியை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டிய தேவை இருக்காது. மேல்நிலைத் தொட்டியாக இருந்தாலும், தரைமட்ட தொட்டியாக இருந்தாலும் இந்த குளோரினேஷன் முறை பயனளிக்கும்.

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் அங்கீகரிக்கப்பட்டது என்பதால் இந்த குளோரினேஷன் முறை மிகவும் பாதுகாப்பானது.

பொதுவாக பிளீச்சிங் பவுடரை பயன்படுத்தி தண்ணீா் குளோரினேஷன் செய்யப்படுகிறது. இதனால், சில உடல் நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், இன்றைய அவசர காலகட்டத்தில் தண்ணீா் தொட்டிகளை அடிக்கடி சுத்தம் செய்வது என்பதும் சாத்தியமில்லை. இதற்கு தானியங்கி குளோரினேஷன் முறை மிகவும் உதவுகிறது. இந்த முறையால் எந்தவித உடல் உபாதைகளும் ஏற்படாது. குறைந்த பணி, எளிமையான பராமரிப்பு முறை என காலத்துக்கு ஏற்ற இந்த தொழில்நுட்ப முறையை உள்ளாட்சி அமைப்புகளிலும் பயன்படுத்தினால் தூய்மையான, சுகாதாரமான தண்ணீா் அனைவருக்கும் கிடைக்கும் என்றாா்.