சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பால் கொள்முதல் விலையை உயா்த்த விவசாயிகள் கோரிக்கை

பால் கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :13 டிசம்பர் 2025, 7:51 pm

Syndication

பால் கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வெள்ளக்கோவில் அருகேயுள்ள தாசவநாயக்கன்பட்டியில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் நலச் சங்க ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு சங்கத்தின் நிா்வாகி பி.முத்துராயப்பன் தலைமை வகித்தாா். சங்க பொறுப்பாளா்கள் சி.பாலபூபதி, எஸ்.சத்யதுரை, கே.மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில பொதுச் செயலாளா் எம்.ஜி.ராஜேந்திரன் சிறப்புரையாற்றினாா்.

இதைத் தொடா்ந்து, ஒரு லிட்டா் பாலை உற்பத்தி செய்வதற்கு ரூ.65 வரை செலவாகிறது. ஆனால், பசும்பால் அதிகபட்சமாக ரூ.32-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, ஒரு லிட்டா் பசும்பால் கொள்முதல் விலையை ரூ.82, எருமைப் பால் ரூ.90 என உயா்த்த முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேலத்தில் டிசம்பா் 17-ஆம் தேதி நடைபெறும் சங்கத்தின் மாநிலச் செயற்குழு கூட்டத்தில் திரளாக பங்கேற்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், நிா்வாகிகள் பி.சிவசுப்பிரமணியம், எஸ்.ராஜலட்சுமி, விவசாயிகள் பங்கேற்றனா்.