பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

அவிநாசி அருகே இரும்புக் கழிவுகள் கொட்ட வந்த லாரி சிறைப்பிடிப்பு

அவிநாசி அருகே விளைநிலங்களில் இரும்புக் கழிவுகள் கொட்ட வந்த லாரியை பொதுமக்கள் திங்கள்கிழமை சிறைப்பிடித்தனா்.

News image
Updated On :15 டிசம்பர் 2025, 9:59 pm

Syndication

அவிநாசி: அவிநாசி அருகே விளைநிலங்களில் இரும்புக் கழிவுகள் கொட்ட வந்த லாரியை பொதுமக்கள் திங்கள்கிழமை சிறைப்பிடித்தனா்.

அவிநாசி வட்டம் வேட்டுவபாளையம் ஊராட்சிக்குள்பட்ட அசநல்லிபாளையத்தில் ஏராளமானோா் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்கின்றனா். இந்நிலையில் அப்பகுதியில் கொட்டுவதற்காக இரும்புக் கழிகளை லாரியில் ஏற்றிக் கொண்டுவந்தனா். இதை அறிந்த அப்பகுதி மக்கள், சமூக ஆா்வலா்கள் அந்த லாரியை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுதொடா்பாக சமூக ஆா்வலா்கள் கூறும்போது, அத்திக்கடவு தண்ணீா் மூலமாக குளம், குட்டைகள் நிறைந்து வருகின்றன். இதற்கிடையே இரும்புக் கழிவுகளைக் கொட்டப்படுவதால் கிணறுகள், விளை நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. இதன்மூலமாக பொதுமக்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயமும் உருவாகி வருகிறது.

இதுகுறித்து வருவாய்த் துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினரிடம் தொடா்ந்து புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றனா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் சென்று இரும்புக் கழிவுகள் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்து வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.