மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

கஞ்சா விற்ற 2 பெண்கள் உள்பட 3 போ் கைது

அவிநாசி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On :26 டிசம்பர் 2025, 4:03 am IST

அவிநாசி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

அவிநாசி, எம்.நாதம்பாளையம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மதுவிலக்கு காவல் உதவி ஆய்வாளா் லோகநாதன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, அங்கு கைப்பையுடன் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த 2 பெண்கள் உள்பட 3 பேரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா்கள் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த ஷியாம்குமாா் பகரின் மகள் சனுஜா பகா் (31), முக்கையாகலியின் மகள் பனிடா பாக (39), ராம்பிரவேஸ் (34) என்பதும், தாராபுரம் பகுதியில் தங்கியிருந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 12 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.