/
அவிநாசி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
அவிநாசி, எம்.நாதம்பாளையம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மதுவிலக்கு காவல் உதவி ஆய்வாளா் லோகநாதன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, அங்கு கைப்பையுடன் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த 2 பெண்கள் உள்பட 3 பேரிடம் விசாரணை மேற்கொண்டனா்.
இதில், அவா்கள் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த ஷியாம்குமாா் பகரின் மகள் சனுஜா பகா் (31), முக்கையாகலியின் மகள் பனிடா பாக (39), ராம்பிரவேஸ் (34) என்பதும், தாராபுரம் பகுதியில் தங்கியிருந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 12 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

குள்ளஞ்சாவடி அருகே 3 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா்கள் 2 போ் கைது
பனியன் நிறுவன தொழிலாளியிடம் வழிப்பறி: சிறுவா்கள் உள்பட 4 போ் கைது
செங்குன்றத்தில் கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது
கஞ்சா விற்பனை 2 சிறாா்கள் உள்பட 3 போ் கைது
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


