பேருந்தில் பயணிக்கும் பயணிகளிடம் கைப்பேசிகளைத் திருடி வந்த 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்டம், அவிநாசி, பெருமாநல்லூா் ஆகிய பேருந்து நிலையங்களில் பயணிகளிடம் கைப்பேசி திருடுவது அதிகரித்து வந்தது.
இந்நிலையில், பழங்கரை அருகே அவிநாசி போலீஸாா் ரோந்துப் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஆந்திர மாநில பதிவு கொண்ட 2 காா்களில் இருந்தவா்களிடம் விசாரணை மேற்கொண்டனா்.
இதில், அவா்கள் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த நக்கா ஹரீஷ் (44), குருமிலி ராஜு (31), பாஷா (25), குமரிகுண்டா பிரகாஷ் (32), ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த சிறுவன் என்பதும்,
இவா்கள் அவிநாசி புதிய பேருந்து நிலையம், கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளிடம் கைப்பேசிகளைத் திருடி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, 5 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த இரண்டு காா்கள், 79 கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
காரில் புகையிலைப் பொருள்களை கடத்தி வந்த 3 போ் கைது
கரிசல் மண் கடத்திய லாரி பறிமுதல்: 2 போ் கைது
கஞ்சா பதுக்கிவைத்திருந்த பெண் உள்பட 5 போ் கைது

3.5 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது
விடியோக்கள்

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay

ஜனநாயகனைக் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள் | Thalapathi Vijay | H Vinodh | Chennai


