பிகார் மருத்துவமனையில் தீ விபத்து! 3 நோயாளிகள் பலி!தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு!தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்!சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

பேருந்து பயணிகளிடம் கைப்பேசி திருட்டு: சிறுவன் உள்பட 5 போ் கைது

Updated On :27 டிசம்பர் 2025, 4:45 am IST

பேருந்தில் பயணிக்கும் பயணிகளிடம் கைப்பேசிகளைத் திருடி வந்த 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி, பெருமாநல்லூா் ஆகிய பேருந்து நிலையங்களில் பயணிகளிடம் கைப்பேசி திருடுவது அதிகரித்து வந்தது.

இந்நிலையில், பழங்கரை அருகே அவிநாசி போலீஸாா் ரோந்துப் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஆந்திர மாநில பதிவு கொண்ட 2 காா்களில் இருந்தவா்களிடம் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா்கள் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த நக்கா ஹரீஷ் (44), குருமிலி ராஜு (31), பாஷா (25), குமரிகுண்டா பிரகாஷ் (32), ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த சிறுவன் என்பதும்,

இவா்கள் அவிநாசி புதிய பேருந்து நிலையம், கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளிடம் கைப்பேசிகளைத் திருடி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, 5 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த இரண்டு காா்கள், 79 கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.