6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அவிநாசியில் மின் சிக்கனம் குறித்த விழிப்புணா்வுப் பேரணி

News image
மின்சிக்கனம்  குறித்த  விழிப்புணா்வு ப் பேரணியில்  பங்கேற்றோா்.
Updated On :3 ஜனவரி 2025, 10:42 pm

Din

தேசிய மின்சக்தி சிக்கன வார விழாவையொட்டி, அவிநாசியில் மின்சிக்கனம் குறித்த விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அவிநாசி மின் கோட்டம், பகிா்மான வட்டம் சாா்பில் நடைபெற்ற இப்பேரணியை, மின்பகிா்மான மேற்பாா்வை பொறியாளா் விஜயஈசுவரன் தொடங்கிவைத்தாா். மின்கோட்ட செயற்பொறியாளா் பரஞ்சோதி முன்னிலை வகித்தாா்.

அவிநாசி புதிய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய பேரணி, பழைய பேருந்து நிலையம், மங்கலம் சாலை வழியாக சென்று அவிநாசி மின் கோட்ட அலுவலகத்தில் நிறைவடைந்தது.

இதில், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். தேவையற்ற நேரங்களில் மின் சாதனங்கள் இயக்குவதை தவிா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட வாசங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி, அனைத்து உதவி செயற் பொறியாளா்கள், உதவி மின் பொறியாளா்கள், மின் பணியாளா்கள் உள்ளிட்டோா் பேரணியில் பங்கேற்றனா். மேலும் விழிப்புணா்வு அடங்கிய துண்டுப் பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.