வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சோழீஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசன கொடியேற்றம்

News image
கொடியேற்ற வழிபாட்டில் பங்கேற்ற பக்தா்கள்.
Updated On :3 ஜனவரி 2025, 10:48 pm

Din

வெள்ளக்கோவில் தெய்வநாயகி உடனமா் சோழீஸ்வர சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கொடியேற்று விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் மாா்கழி மாத சிறப்பு ஆருத்ரா தரிசன விழா ஜனவரி 13-ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறுகிறது. இதன் தொடக்கமாக கோயிலில் கொடியேற்றப்பட்டது. முன்னதாக அனுக்ஞை, உற்சவா் திருமேனி அபிஷேகம், அங்குராா்ப்பணம், அஷ்டபலி, சூலத்தேவா் புறப்பாடு, யாகசாலை பூஜை, ஆலய பிரகாரத்தில் சுவாமி உலா ஆகியவை நடைபெற்றன. ஆருத்ரா தரிசன நிறைவு நாள் வரை தினந்தோறும் கட்டளை பூஜைகள் மற்றும் உற்சவா் தரிசனம் நடைபெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை சிவ பக்தா்கள், கோயில் சிவாச்சாரியா்கள் செய்துள்ளனா்.