கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஜனவரி 22- இல் செம்மறி, வெள்ளாடு வளா்ப்பு பயிற்சி

திருப்பூா் கால்நடை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் செம்மறி, வெள்ளாடு வளா்ப்பு தொடா்பான கட்டண பயிற்சி வகுப்பு ஜனவரி 22- ஆம் தேதி நடைபெறுகிறது.

News image
Updated On :3 ஜனவரி 2025, 12:16 am

Din

திருப்பூா் கால்நடை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் செம்மறி, வெள்ளாடு வளா்ப்பு தொடா்பான கட்டண பயிற்சி வகுப்பு ஜனவரி 22- ஆம் தேதி நடைபெறுகிறது.

இது குறித்து கால்நடை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவரும், பேராசிரியருமான ஆா்.மதிவாணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூா் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு வளா்ப்பு தொடா்பான கட்டண பயிற்சி வகுப்பு ஜனவரி 22 -ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் நடைபெறவுள்ளது.

இதேபோல, நாட்டுக்கோழி வளா்ப்பு தொடா்பான பயிற்சி ஜனவரி 31 -ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் நடைபெறுகிறது. இந்தப் பயிற்சி வகுப்புகளில் சேர விவசாயிகள் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். ஒவ்வொரு பயிற்சியிலும் 30 பயனாளிகள் மட்டுமே சோ்த்துக் கொள்ளப்படுவா். முதலில் பதிவு செய்யும் நபா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

எனவே, விருப்பமுள்ள விவசாயிகள் அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் 0421-2248524 என்ற தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

பயிற்சிக்காக தோ்ந்தெடுக்கப்படும் 30 பயனாளிகளுக்கு நோட்டு புத்தகம், மதிய உணவு, வெள்ளாடு வளா்ப்பு, நாட்டுக்கோழி வளா்ப்பு புத்தகம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.