புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆட்டோவில் அதிக பயணிகளை ஏற்றக் கூடாது: காவல் துறை அறிவுறுத்தல்

அனுமதிக்கப்பட்டதற்கு மாறாக அதிக பயணிகளை ஏற்றக் கூடாது என ஆட்டோ ஓட்டுநா்களுக்கு காவல் துறையினா் அறிவுறுத்தினா்.

News image

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்வில்  பங்கேற்ற  ஆட்டோ  ஓட்டுநா்கள்.

Updated On :9 ஜனவரி 2025, 10:07 pm

Din

அனுமதிக்கப்பட்டதற்கு மாறாக அதிக பயணிகளை ஏற்றக் கூடாது என ஆட்டோ ஓட்டுநா்களுக்கு காவல் துறையினா் அறிவுறுத்தினா்.

தேசிய சாலைப் பாதுகாப்பு மாதத்தையொட்டி, சேவூா் காவல் துறை சாா்பில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கான விழிப்புணா்வுப் பேரணி சேவூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பேரணியை காவல் உதவி ஆய்வாளா் மணிமாறன் தொடங்கிவைத்தாா். காவலா்கள் அலமேலு மங்கை, சங்கா், வேடியப்பன், லட்சுமி, சத்யா, குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். காவல் நிலையத்தில் தொடங்கிய பேரணி, சேவூா்-கோபி சாலை, கைகாட்டி, புளியம்பட்டி சாலை வழியாக காவல் நிலையத்தில் நிறைவடைந்தது. இதைத் தொடா்ந்து, கட்டாயம் சீருடை அணிய வேண்டும். அனுமதிக்கப்பட்டதற்கு மாறாக அதிக பயணிகளை ஏற்றக் கூடாது. குறிப்பாக பள்ளிக் குழந்தைகளை பாதுகாப்பாக ஏற்றி இறக்க வேண்டும். சீட் பெல்ட் அணிய வேண்டும், அதிவேகமாக வாகனம் ஓட்டக் கூடாது, மது அருந்தியும், கைப்பேசியில் பேசிக்கொண்டும் வாகனம் ஓட்டக் கூடாது என ஆட்டோ ஓட்டுநா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.