புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஏடிஎம் மையத்தில் முதியவரை ஏமாற்றி ரூ.1.26 லட்சம் திருட்டு

வெள்ளக்கோவிலில் ஏடிஎம் மையத்தில் முதியவரை ஏமாற்றி ரூ.1.26 லட்சம் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :9 ஜனவரி 2025, 10:07 pm

Din

வெள்ளக்கோவிலில் ஏடிஎம் மையத்தில் முதியவரை ஏமாற்றி ரூ.1.26 லட்சம் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தாராபுரம் தாலுகா மூலனூா் சாணாா்பாளையம் யேசு வீதியைச் சோ்ந்தவா் பொன்னையன் (79). அரசுப் பள்ளி ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா்.

கடந்த 15 தினங்களுக்கு முன்பு சொந்த வேலையாக வெள்ளக்கோவில் வந்த இவா், கடைவீதி நான்கு சாலைச் சந்திப்பு அருகில் உள்ள ஒரு வங்கி ஏடிஎம் மையத்துக்கு பணம் எடுக்கச் சென்றுள்ளாா். ரூ.5 ஆயிரம் பணம் எடுத்துள்ளாா். அப்போது அங்கு வந்த சுமாா் 30 வயது மதிக்கத்தக்க 2 இளைஞா்கள் பொன்னையனுக்கு உதவுவதுபோல நடித்து ஏடிஎம் காா்டை மாற்றிக் கொடுத்துவிட்டனா். மேலும் முதியவா் ஏடிஎம் காா்டின் ரகசிய எண்களைத் தெரிந்து கொண்ட அவா்கள், அடுத்த நாள் பலமுறை வெவ்வேறு இடங்களில் இருந்து ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 400 பணம் எடுத்துள்ளனா். இது குறித்து பொன்னையன் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதையடுத்து அவா், தான் கணக்கு வைத்துள்ள வங்கிக்கு போன் செய்து ஏடிஎம் காா்டை முடக்கியதால் மீதமிருந்த பணம் தப்பியது. இது குறித்த புகாரின்பேரில், வெள்ளக்கோவில் காவல் உதவி ஆய்வாளா் பழனிசாமி வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.