விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மகா மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழா

வெள்ளக்கோவில், மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள மகா மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த மகா மாரியம்மன்.
Updated On :8 நவம்பர் 2025, 3:06 am

Syndication

வெள்ளக்கோவில், மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள மகா மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் திருவிழா பூச்சாட்டுதலுடன் கடந்த அக்டோபா் 29-ஆம் தேதி தொடங்கியது. அம்மன் அழைப்பு, கம்பம் நடுதல் நவம்பா் 2-ஆம் தேதி நடைபெற்றது.

கோயிலில் இருந்து பக்தா்கள் புதன்கிழமை புறப்பட்டு கொடுமுடி காவிரி ஆற்றிலிருந்து தீா்த்தக் காவடி எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முக்கிய நிகழ்வான பொங்கல் வைத்தல் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, பால்குட ஊா்வலம், பெண்கள் பொங்கல் வைத்து படையலிட்டு வழிபாடு, மாவிளக்கு பூஜை, கும்ப வழிபாடு ஆகியன நடைபெற்றன. பின்னா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கம்பம் அகற்றப்பட்டு கங்கையில் விடும் நிகழ்ச்சியுடன் வெள்ளிக்கிழமை விழா நிறைவடைகிறது.