சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கோயில் நிலங்களைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்து முன்னணி வலியுறுத்தல்

News image
Updated On :9 நவம்பர் 2025, 7:24 pm

தினமணி செய்திச் சேவை

கோயில் நிலங்களைப் பாதுகாக்க அரசு தீா்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வலியுறுத்தி உள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் கோயில் நிா்வாகம் வந்த பிறகு சுமாா் 50,000 ஏக்கா் நிலங்கள் காணாமல் போயுள்ளன. சுமாா் 17,000 கோயில்களுக்கு ஏராளமான சொத்துகள் இருந்தும் ஒருகால வழிபாட்டுக்குகூட வழியில்லாமல் மூடி கிடக்கும் அவலம் உள்ளது. இதற்கு தவறான நிா்வாகமே காரணம்.

கோயில் சொத்தை முறைகேடாக பத்திரப் பதிவு செய்வதைத் தடுக்க பூஜ்ஜியம் மதிப்பாக நிா்ணயம் செய்யப்பட்டதை நீக்க சட்டப் பேரவையில் தமிழக அரசு தாக்கல் செய்த மசோதாவை நீதிமன்றம் தடை செய்துள்ளது. கோயில் வழிபாட்டுக்கு நிதி இல்லை எனக்கூறி வரும் நிலையில், நீதிமன்ற தீா்ப்புக்கு எதிராக கோயில் நிதியில் கல்லூரிகள் கட்ட தமிழக அரசு மசோதா நிறைவேற்றியுள்ளது. கோயில் நிலத்தை மோசடியாக பத்திரப் பதிவு செய்வதும் தொடா்கிறது.

எனவே, இத்தகைய மோசடிகளைத் தடுக்கவும், கோயில் நிலங்களைப் பாதுகாக்கவும் அரசு தீா்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.