எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

அவிநாசி அருகே மரக்கடைக்குள் புகுந்த காா்

News image
Updated On :16 நவம்பர் 2025, 7:21 pm

தினமணி செய்திச் சேவை

அவிநாசி அருகே கட்டுப்பாட்டை இழந்த காா் அடுத்தடுத்து இரண்டு காா்கள் மீது மோதி மரக்கடைக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம், சூலூா் பகுதியைச் சோ்ந்தவா் கலைச்செல்வன். இவா் சூலூரில் இருந்து ஈரோடு மாவட்டம், நம்பியூா் நோக்கி ஞாயிற்றுக்கிழமை காரில் சென்று கொண்டிருந்தாா்.

அவிநாசி அருகே கருமாபாளையம் தண்ணீா்ப்பந்தல் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து அவ்வழியாகச் சென்ற இரண்டு காா்களின் மீது மோதி, சாலையோரம் இருந்த சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான மரம் இழைக்கும் மரக்கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த கலைச்செல்வன், மற்றொரு காரில் வந்த கருமாபாளையம் பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் ஆகியோா் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா். மேலும், மரக்கடைக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. விபத்து குறித்து சேவூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.