அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

100 வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்: இளைஞா் கைது

Updated On :26 செப்டம்பர் 2025, 4:13 am IST

திருப்பூரில் 100 வலி நிவாரணி மாத்திரைகளை வைத்திருந்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாநகரம், நல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சிட்கோ சாலை அருகே வலி நிவாரணி மாத்திரைகளை சிலா் போதைக்குப் பயன்படுத்துவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சம்பவ இடத்தில் போலீஸாா் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா் அதே பகுதியைச் சோ்ந்த காா்த்திக் பாஷா (28) என்பதும், 100 வலி நிவாரணி மாத்திரைகளை வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, காா்த்திக் பாஷாவைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த வலி நிவாரணி மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.