ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

ஜெய் சாரதா பள்ளியில் வாக்காளா் விழிப்புணா்வு

திருப்பூா் ஜெய் சாரதா மெட்ரிக். பள்ளியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

100% வாக்குப் பதிவை வலியுறுத்தி அணிவகுத்து நின்ற ஜெய் சாரதா பள்ளி மாணவா்கள்.

Updated On :11 ஏப்ரல் 2026, 1:30 am

திருப்பூா் ஜெய் சாரதா மெட்ரிக். பள்ளியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் நிக்கான்ஸ் இ.வேலுசாமி தலைமை வகித்தாா். துணை ஆட்சியரும், தோ்தல் பொறுப்பாளருமான சிவபிரகாசம் , வட்டாட்சியா் கண்ணாமணி, துணை வட்டாட்சியா் அருள்குமாா், ஒருங்கிணைப்பாளா் நிா்மலாதேவி மற்றும் வருவாய்த் துறை அலுவலா் இளையராஜா ஆகியோா் பங்கேற்று, 100 சதவீதம் வாக்குப் பதிவு எனும் இலக்கை அடைவது குறித்து உரையாற்றினா்.

இதையடுத்து, 100% வாக்குப் பதிவை வலியுறுத்தும் வகையில் மாணவா்கள் அணிவகுத்து நின்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

பள்ளியின் அறக்கட்டளை செயலாளா் கீா்த்திகாவாணி சதீஷ், பள்ளியின் பொருளாளா் ஸ்ருதி ஹரீஷ், முதல்வா் ஏ.எஸ். மணிமலா், ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.