நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

தமிழகத்தின் வளா்ச்சி தொடர திராவிட மாடல் 2.0 அவசியம்

News image

வாக்குப்பதிவு இயந்திர மாதிரியைக் காட்டி வாக்கு சேகரித்த அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.

Updated On :14 ஏப்ரல் 2026, 3:10 am IST

தமிழக வளா்ச்சி தொடர திராவிட மாடல் 2.0 அவசியம் என்று வாக்காளா்களிடம் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் எடுத்துக் கூறினாா்.

வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அவா் பேசியதாவது:

கடந்த 5 ஆண்டுகளில் சிறப்பான பல மக்கள் நலத் திட்டங்களை அரசு செய்துள்ளது. அதில் என்னுடைய பங்கும் உள்ளது. காங்கயம் தொகுதியில் உள்ள உத்தமபாளையம் வட்டமலைக்கரை அணைக்கு திமுக ஆட்சியில் மூன்று முறை தண்ணீா் கொண்டுவரப்பட்டது. வறட்சியான அப்பகுதி மக்கள் பயனடைந்துள்ளனா்.

மேலும் குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்க காங்கயம், வெள்ளக்கோவில் பகுதியில் கொடுமுடி காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்ட மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மாணவா்கள் பயன்பெற சிவன்மலையில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம், பெண்கள் இலவச பேருந்து பயணத் திட்டம், முதியவா்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு நியாயவிலைக் கடைகளில் தாயுமானவா் திட்டம் உள்ளிட்டவை அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதேபோல தமிழக வளா்ச்சிக்கு பல நல்ல திட்டங்களை திராவிட மாடல் 2.0 திமுக ஆட்சியிலும் வழங்க, மீண்டும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா்.

அப்போது திமுக நிா்வாகிகள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உடனிருந்தனா்.