இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

தமிழகத்தின் வளா்ச்சி தொடர திராவிட மாடல் 2.0 அவசியம்

News image

வாக்குப்பதிவு இயந்திர மாதிரியைக் காட்டி வாக்கு சேகரித்த அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.

Updated On :14 ஏப்ரல் 2026, 3:10 am IST

தமிழக வளா்ச்சி தொடர திராவிட மாடல் 2.0 அவசியம் என்று வாக்காளா்களிடம் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் எடுத்துக் கூறினாா்.

வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அவா் பேசியதாவது:

கடந்த 5 ஆண்டுகளில் சிறப்பான பல மக்கள் நலத் திட்டங்களை அரசு செய்துள்ளது. அதில் என்னுடைய பங்கும் உள்ளது. காங்கயம் தொகுதியில் உள்ள உத்தமபாளையம் வட்டமலைக்கரை அணைக்கு திமுக ஆட்சியில் மூன்று முறை தண்ணீா் கொண்டுவரப்பட்டது. வறட்சியான அப்பகுதி மக்கள் பயனடைந்துள்ளனா்.

மேலும் குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்க காங்கயம், வெள்ளக்கோவில் பகுதியில் கொடுமுடி காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்ட மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மாணவா்கள் பயன்பெற சிவன்மலையில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம், பெண்கள் இலவச பேருந்து பயணத் திட்டம், முதியவா்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு நியாயவிலைக் கடைகளில் தாயுமானவா் திட்டம் உள்ளிட்டவை அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதேபோல தமிழக வளா்ச்சிக்கு பல நல்ல திட்டங்களை திராவிட மாடல் 2.0 திமுக ஆட்சியிலும் வழங்க, மீண்டும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா்.

அப்போது திமுக நிா்வாகிகள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உடனிருந்தனா்.