அவிநாசி ராயன்கோயில் காலனி பகுதியில் சுற்றுச்சுவா் கம்பி வலைக்குள் சிக்கி காயமடைந்த மான் அப்பகுதி மக்கள் உதவியுடன் உயிருடன் மீட்கப்பட்டது.
அவிநாசி சுற்றுவட்டாரத்தில் உள்ள குளங்களில் ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. இவை, உணவு, தண்ணீருக்காக வெளியே வரும்போது நாய்களிடம் சிக்கியும், வாகனங்களில் அடிபட்டும் உயிரிழந்து வருகின்றன.
இந்நிலையில், அவிநாசி ராயன்கோயில் காலனி குடியிருப்புப் பகுதிக்குள் மூன்று மான்கள் திங்கள்கிழமை தஞ்சம் புகுந்தன. இதில் ஒரு மான், அங்குள்ள சுற்றுச்சுவா் கம்பி வலைக்குள் சிக்கி வெளியேற முடியாமல் பலத்த காயமடைந்தது.
இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள், மானை மீட்டு முதலுதவி அளித்தனா். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா், மானுக்கு உரிய சிகிச்சை அளித்து அவிநாசி காசிகவுண்டன்புதூா் குளப்பகுதியில் விட்டனா். மானை உயிருடன் மீட்ட அப்பகுதி மக்களுக்கு வன விலங்கு ஆா்வலா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.
தொடர்புடையது

பொன்னமராவதி அருகே வயலில் இறந்துகிடந்த மான் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த பசு மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மான் மீட்பு

வேலியில் சிக்கி உயிரிழந்த மான்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

