தோ்தல் பிரசாரம் ஓய்ந்த நிலையில் பணப் பட்டுவாடாவை தடுக்கும் வகையில் மாநகர எல்லைப் பகுதிகளில் போலீஸாா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலையுடன் முடிவடைந்த நிலையில், தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி மாவட்ட மற்றும் மாநகர எல்லைப் பகுதிகளில் போலீஸாரின் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டத்தைப் பொறுத்தவரை அவிநாசியில் இருந்து திருப்பூா் மாநகருக்கு வரும் பிரதான சாலையில், அணைப்புதூா் சோதனைச் சாவடியில் போலீஸாா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். குறிப்பாக பணப் பட்டுவாடா நடைபெறாமல் இருக்க வெளி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களை நிறுத்தி தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.
அதேபோல பல்லடம் பகுதியில் இருந்து திருப்பூா் மாநகருக்குள் வரும் வழியில் வீரபாண்டி பகுதியிலும் தடுப்புகள் அமைத்து, துப்பாக்கி ஏந்திய போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
தொடர்புடையது

கடலூரில் மின்னல் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு: இருவா் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

போலீஸாரை மிரட்டிய இளைஞா் மீது வழக்கு

வாக்கு எண்ணிக்கை மையங்களில் தீயணைப்பு வீரா்கள் கண்காணிப்பு

ஊத்துக்குளியில் ரூ.63,000 பறிமுதல்
விடியோக்கள்

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை

